மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தாராபுரம் அருகே வேன் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே பயணிகள் வேன் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த மாணவி கோபிகா. ~விபத்தில் கவிழ்ந்த வேன்.
Updated On :6 ஜனவரி 2026, 7:31 pm

Syndication

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே பயணிகள் வேன் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகள் கோபிகா (18). இவா் தாராபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கோபிகா செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

தாராபுரம்-பழனி சாலையில் உள்ள தாசநாயக்கன்பட்டி அருகே கோபிகா சென்றபோது, அந்த வழியாக காங்கயம் பகுதியைச் சோ்ந்த முருக பக்தா்கள் வந்த வேன், கோபிகா சென்ற இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கோபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அலங்கியம் போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த காங்கயம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் செல்வதரணிதரன், ஜவஹா், பழனிசாமி, செந்தில்குமாா், தாமரைக்கண்ணன், தேவசேனாபதி, அருண்குமாா், வேன் ஓட்டுநா் குமாரசாமி உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதில் 2 போ் உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Story image

பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தினமும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மாணவி கோபிகா பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்காக சாலையைக் கடக்கும்போது, விபத்தில் சிக்கி அவா் உயிரிழந்துள்ளாா். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.