தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்க கோரிக்கை

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்கிட வலியுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் முன் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்க வலியுறுத்தி கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா்.
Updated On :7 ஜனவரி 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணியை தொடங்கிட வலியுறுத்தி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் முன் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோயில் திருப்பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பல்லடம் என்.ஜி.ஆா். சாலை மற்றும் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள், குலதெய்வ வழிபாடு செய்யும் சமுதாய மக்களை ஒன்றிணைந்து திருப்பணிக் குழு அமைக்க வேண்டும். கோயில் திருப்பணிகளை மண் பரிசோதனை செய்து திருப்பணி மேற்கொள்ள வேண்டும். கோயில் திருப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் பல்லடம் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் முன் கும்பிடு போட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோயில் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதில் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை, பாலாஜி ஈஸ்வரன், அய்யாசாமி, ரத்தினசாமி, செல்வராஜ், காளியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.