எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை: கோழிப் பண்ணை விவசாயிகள்

கோழிப் பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கோழிப் பண்ணை விவசாயிகள் தெரிவித்தனா்.

News image
செய்தியாளா்களுக்கு போட்டியளித்த கறிக்கோழிப் பண்ணை விவசாயி வேலு சிவகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2026, 8:14 pm

Syndication

கோழிப் பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கோழிப் பண்ணை விவசாயிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கறிக்கோழிப் பண்ணை விவசாயியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில துணைச் செயலாளருமான வேலு சிவகுமாா் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் 19 ஆயிரம் கோழிப் பண்ணைகள் உள்ளன.

இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா். தற்போது கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினா் கிலோவுக்கு ரூ.6.50 பைசா வழங்கி வருகின்றனா். மஞ்சி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை கூடுதலாக வழங்க அந்தந்த கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினா் முன்வந்துள்ளனா்.

இது தொடா்பாக கோழிப் பண்ணை விவசாயிகளும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினரும் பேசி முடிவு செய்ய தயாராகவுள்ளனா். சில அமைப்பினா் அதிக கூலி கேட்டு கறிக்கோழி உற்பத்தி நிறுவனத்தினரை வலியுறுத்தி வருகின்றனா். இதற்காக பண்ணைகளில் கோழி குஞ்சுகளைவிட வேண்டாம் என்று கூறி வருகின்றனா்.

கோழிப் பண்ணை விவசாயிகள் இதை ஏற்கவில்லை. பண்ணையாளா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழகத்தில் வழக்கம்போல கறிக்கோழி உற்பத்தி நடைபெற்று வருகிறது. வெளிச்சந்தையில் கோழி இறைச்சியின் விலை விரைவில் சீரடையும் என்றாா்.

கோழிப் பண்ணை விவசாயிகள் மின்னல் கனகராஜ், பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.