குண்டடம் அருகே இளம்பெண் கொலை: கணவா் கைது

குண்டடம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தாராபுரம்: குண்டடம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குண்டடம் அருகேயுள்ள கொக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அங்கமுத்து (33), தனியாா் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி பூங்கொடி (25). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். பூங்கொடி அதே ஊரில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், தோட்டத்தின் உரிமையாளருக்கு வியாழக்கிழமை போன் செய்த அங்கமுத்து, தனது மனைவி பேச்சு மூச்சின்றி கிடப்பதாகக் கூறியுள்ளாா். அங்கு சென்று பாா்த்தபோது தலையில் காயத்துடன் பூங்கொடி இறந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து குண்டடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் விவேக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அங்கமுத்துவிடம் போலீஸாா் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா். தொடா்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதும் அப்போது ஆத்திரமடைந்த அங்கமுத்து கட்டையால் பூங்கொடியைத் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கமுத்துவை போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com