எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனை

வெள்ளக்கோவிலில் 25 எண்ணிக்கையிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:48 pm

Syndication

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் 25 எண்ணிக்கையிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு உத்தரவுப்படி திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனை நடைபெறுகிா என காங்கயம் சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது வெள்ளமடை அத்தாம்பாளையம் பிரிவு அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. 180 மிலி அளவுடைய 25 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், நாரணமங்கலம் பாப்பநந்தல் வீரய்யா (56) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.