உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பல்லடம் அருகே சூதாட்டம்: ஊராட்சி செயலா் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் சுக்கம்பாளையத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, செம்மிபாளையம் ஊராட்சி செயலராக பணிபுரியும் பிரபு விஜயகுமாா்(32) என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து பிரபு விஜயகுமாா் மற்றும் மணிகண்டன் (35), குணசேகரன் (30), துா்க்கை வேலன் (37), கோகுல்நாத் (27), பிரவீன் குமாா் (23) ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்டத்துக்காக பயன்படுத்திய காா், 9 இரண்டு சக்கர வாகனங்கள், ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.