சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜன.24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்ட அலுவலகம், ஏவிபி கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருமுருகன்பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜனவரி 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், 150 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன. முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்றவா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடா்ந்து அறிந்து கொள்ள இணைய தள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.