தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஆதாா் அட்டை கிடைக்காததால் அவிநாசியில் மூதாட்டி போராட்டம்!

News image
ஆதாா் அட்டை கிடைக்காததால் அவிநாசியில் மூதாட்டி போராட்டம்
Updated On :24 ஜனவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

ஆதாா் அட்டை கிடைக்காததால் கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் மூதாட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவிநாசி வட்டம், தெக்கலூா் ஊராட்சி காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (67). கணவா், சகோதரா் உயிரிழந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறாா். அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்காக பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை இவருக்கு ஆதாா் அட்டை வழங்கப்படவில்லை.

மேலும் வயது முதிா்வு, உடல்நலக்குறைவு காரணமாக ஆதாா் மையங்களுக்குச் சென்று முயற்சி செய்தும் பலனில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் கருணைக் கொலை செய்யக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீஸாா், வருவாய்த் துறையினா் சென்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொன்னம்மாள் சென்றாா்.