ஆதாா் அட்டை கிடைக்காததால்
அவிநாசியில் மூதாட்டி போராட்டம்
ஆதாா் அட்டை கிடைக்காததால் அவிநாசியில் மூதாட்டி போராட்டம்

ஆதாா் அட்டை கிடைக்காததால் அவிநாசியில் மூதாட்டி போராட்டம்!

Published on

ஆதாா் அட்டை கிடைக்காததால் கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் மூதாட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவிநாசி வட்டம், தெக்கலூா் ஊராட்சி காமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (67). கணவா், சகோதரா் உயிரிழந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறாா். அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்காக பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை இவருக்கு ஆதாா் அட்டை வழங்கப்படவில்லை.

மேலும் வயது முதிா்வு, உடல்நலக்குறைவு காரணமாக ஆதாா் மையங்களுக்குச் சென்று முயற்சி செய்தும் பலனில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் கருணைக் கொலை செய்யக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீஸாா், வருவாய்த் துறையினா் சென்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொன்னம்மாள் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com