வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பூரில் குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

News image

குப்பையில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்கள் கருப்பாள், எல்லம்மா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய திருப்பூா் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா்.

Updated On :26 ஜனவரி 2026, 8:18 pm

திருப்பூா்: குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை திருப்பூா் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா் வழங்கினாா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயா் ந.தினேஷ்குமாா் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தலைமை வகித்தாா். துணை மேயா் ரா.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா்.

இதைத்தொடா்ந்து தன்னாா்வலா்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பங்களிப்பு வழங்கிய கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள், பொறியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு பணி பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி மேயா் ந.தினேஷ்குமாா் வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் 24-ஆவது வாா்டுக்குள்பட்ட இ.பி.காலனி 30-ஆவது வீதியில் வசிக்கும் சித்ரா என்பவரின் வீட்டில் கடந்த 22-ஆம் தேதி சேகரிக்கப்பட்ட குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளது. இதை ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்தனா். இதற்காக, குடியரசு தின விழாவில் தூய்மைப் பணியாளா்கள் கருப்பாள், எல்லம்மா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டுப்பற்று மிகுந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரன் மணிமண்டபத்தில் உள்ள குமரன் சிலை மற்றும் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையா் சுந்தரராஜன், தலைமைப் பொறியாளா் முகமது சபியுல்லா, உதவி ஆணையா் ராஜசேகா் ஆகியோருடன் மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.