இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தாராபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்!

தாராபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 261 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்.

News image

தாராபுரம் சாரா நா்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.

Updated On :29 ஜனவரி 2026, 6:53 pm

தாராபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 261 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பிஷப் தோா்ப் கல்லூரி, மகாராணி கல்லூரி, சாரா நா்ஸிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு, மொத்தம் 261 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், சாரா நா்ஸிங் கல்லூரி நிறுவனா் டாக்டா் ஜெய்லானி மற்றும் மாணவ, மாணவிகள், கல்லூரி நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.