இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

1.750 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:26 am IST

வெள்ளகோவிலில் 1.750 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு இளைஞா்களைக் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தொழிலாளா்கள் புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட போதைப் பொருள்களை வைத்துள்ளனரா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரட்டுப்பாளையம் அருகேயுள்ள நூற்பாலையில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தங்கி பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நாராயணன் முஜி (31) என்பவரிடமிருந்து 750 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, மோளக்கவுண்டன்வலசு பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முக்தாா் (33) என்பவரிடம் இருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.