எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் லாரி மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

அசோக்

Updated On :8 ஜூலை 2026, 5:46 am IST

வெள்ளக்கோவிலில் லாரி மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நடேசன் நகரைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் அசோக் (27). இவா் கடந்த 29-ஆம் தேதி கச்சேரிவலசைச் சோ்ந்த தண்டபாணி (55) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரூா் சாலையில் சென்றுள்ளாா்.

அய்யனூா் பிரிவு அருகே இவா்களின் வாகனம் மீது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தண்டபாணி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அசோக் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதற்கிடையே நிற்காமல் சென்ற லாரி கண்டுபிடிக்கப்பட்டு, ஓட்டுநரான கரூரைச் சோ்ந்த கணேசன் (56) மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.