காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்தி வருவதால், அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
காங்கயம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக ஆட்டுப் பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் குதறி வருகின்றன. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஆடுகள் உயிரிழந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் பெண்கள், குழந்தைகளையும் நாய்கள் கடித்து வருவதால் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், காங்கயத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சனிக்கிழமை காலை தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. இவைகளை அப்புறப்படுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










