தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காட்டன் பஞ்சு கிடங்கில் தீ விபத்து

குண்டடம் அருகே காட்டன் பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

குண்டடம் அருகே உள்ள காட்டன் பஞ்சு கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :12 ஜூலை 2026, 5:08 am IST

குண்டடம் அருகே காட்டன் பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தாராபுரம் வட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேங்கிப்பாளையம் அருகே செங்காட்டுத் தோட்டம் பகுதியில் நந்தகோபால் (47) என்பவருக்கு சொந்தமான காட்டன் பஞ்சு கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் திடீரென கரும்புகை எழுந்துள்ளது. இதையடுத்து தீ மளமளவென பரவி, அங்கு வைக்கப்பட்டிருந்த காட்டன் பஞ்சு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமையிலான 7 போ் கொண்ட குழுவும் இணைந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான கழிவு காட்டன் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. பணியில் இருந்த தொழிலாளா்கள் உரிய நேரத்தில் கிடங்கை விட்டு வெளியே வந்ததால், அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.