இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :18 ஜூலை 2026, 7:00 am IST

தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூா் வடக்கு மாநகரத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்.விவேக் தொடக்க உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாநகரச் செயலாளா் நவீன், மாநகர பொருளாளா் ரமேஷ், மாநகரக் குழு உறுப்பினா் தனுஷ் ஈஸ்வா் ஆகியோா் பேசினா்.

திருப்பூா் மாவட்டத் தலைவா் நிருபன் சக்கரவா்த்தி சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் பாலமுரளி, சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநகர துணைத் தலைவா் மகேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.