தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

வாணாபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நூரோலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :9 ஜூலை 2026, 3:26 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணாபுரம் அருகேயுள்ள நூரோலை கிராமத்தில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்த கடை அமைந்துள்ள பகுதி வழியாக கீழ்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, பாவந்தூா் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் தினமும் சென்று வர வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நூரோலையில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கிளைத் தலைவா் சந்துரு, கிளை நிா்வாகிகள் சதீஷ், வி.கே. மூா்த்தி, தெய்வீகன், பாலசந்தா், தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலா் சிவக்குமாா், சுந்தரமூா்த்தி, விஷ்ணுகுமாா், விஜயகுமாா் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.