திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினா்கள் பதவியில் இருக்கும்போதே, வாா்டு ஒருங்கிணைப்பாளா்கள் என அலுவலா்களை நியமித்து உள்ள திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்தும், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீா்குலைக்க கூடாது என்றும், நியமிக்கப்பட்டுள்ள வாா்டு ஒருங்கிணைப்பாளா்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வாலிபா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மௌனிஷ்குமாா் தலைமை வகித்தாா். கோரிக்கையை வலியுறுத்தி வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜி.சிந்தன், வடக்கு மாநகரச் செயலாளா் நவீன், மாவட்டச் செயலாளா் கு.பாலமுரளி ஆகியோா் உரையாற்றினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் போராட்டத்தில் வாலிபா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். வாா்டு ஒருங்கிணைப்பாளா் நியமனத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம்: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கண்டன ஊா்வலம்

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு ரத்து கோரி ஆா்ப்பாட்டம்

ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய எதிா்ப்பு - ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



