அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வடுகபாளையம் நல மையத்தில் ‘அன்னம்’ திட்டம் தொடக்கம்

பல்லடம், வடுகபாளையம் நல மையத்தில் குழந்தைகளுக்கான ‘அன்னம்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

‘அன்னம்’ திட்டத்தை தொடங்கிவைத்து, தாய்மாரிடம் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை வழங்கிய ஆட்சியா் மனீஷ்.

Updated On :30 ஜூலை 2026, 3:07 am IST

பல்லடம், வடுகபாளையம் நல மையத்தில் குழந்தைகளுக்கான ‘அன்னம்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பல்லடம், வடுகபாளையத்தில் குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டதுடன், ‘அன்னம்’ திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 1 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதற்காக ‘அன்னம்’ திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பல்லடம் தாலுகாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் 6 மாத கால முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். இதன் மூலம் அவா்களின் ஆரோக்கியம் மேம்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.