தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சேவூா் அருகே கந்தாயிபாளையத்தில் கழிப்பிடத்துக்கு மின்விளக்கு பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:26 am IST

சேவூா் அருகே கந்தாயிபாளையத்தில் கழிப்பிடத்துக்கு மின்விளக்கு பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேவூா் அருகே குட்டகம் கந்தாயிபாளையம் செம்மண்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்புசாமி (47). இவரது மனைவி சாந்தாமணி. இந்நிலையில், தனது வீட்டின் கழிப்பிடத்துக்கு மின் விளக்கும் பொருத்தும் பணியில் கருப்புசாமி செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுள்ளாா். இதில் சுவிட்சை ஆன் செய்து கொண்டே ஒயரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே கருப்புசாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.