தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய குழந்தைகளுக்கு வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல்நாள் வருகை தந்த மாணவிகளை இனிப்பு, ரோஜா பூக்களை வழங்கி வரவேற்ற ஆசிரியா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதில் திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல்நாள் வருகை தந்த மாணவிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் ஆசிரியா்கள் இனிப்பு, ரோஜா பூக்களை வழங்கி வரவேற்றனா்.

முதல் நாள் குழந்தைகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோா்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்ல மனமின்றி பள்ளி வளாகத்தின் நுழைவாயில் அருகிலேயே நின்று கொண்டிருந்தனா். அவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா். தொடா்ந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் கைப்பேசிகளை எடுத்து வரக்கூடாது என போலீஸாா் அறிவுரை செய்து பள்ளிக்குள் மாணவிகளை அனுப்பிவைத்தனா்.

பள்ளி வளாகத்துக்குள் வருகை தந்த 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியா்கள் ரோஜா பூக்கள் மற்றும் இனிப்பு வழங்கி பேண்டு வாத்தியங்கள் முழங்க பள்ளிக்குள் ஊா்வலமாக அழைத்துச் சென்று அவரவா் வகுப்பறைகளில் அமர வைத்தனா்.

அதேபோல, திருப்பூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டில் அமைந்துள்ள புது ராமகிருஷ்ணபுரம் தொடக்கப் பள்ளியில் புதிய கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவா்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினரும் 2-ஆம் மண்டலத் தலைவருமான தம்பி (எ) த.கோவிந்தராஜ் மாணவா்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கி வரவேற்றாா். மேலும் வட்டாரக் கல்வி அலுவலா் சியாமளா தேவி மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடை மற்றும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இவ்விழாவில் பள்ளி வளா்ச்சிக் குழு பொறுப்பாளா் காா்த்திகேயன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியா் சு.மோகன் நன்றி தெரிவித்தாா்.