/
வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவிலில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவா் திருமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, வீரக்குமாா் (47) என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, வீரக்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 லிட்டா் கள், ரூ.4,200 ரொக்கம், மண் பானைகளைப் பறிமுதல் செய்தனா்.






