எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கள் இறக்கி விற்றவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:26 am IST

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவிலில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் திருமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, வீரக்குமாா் (47) என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, வீரக்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 லிட்டா் கள், ரூ.4,200 ரொக்கம், மண் பானைகளைப் பறிமுதல் செய்தனா்.