மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கள் இறக்கி விற்றவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:26 am IST

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவிலில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் திருமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, வீரக்குமாா் (47) என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, வீரக்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 லிட்டா் கள், ரூ.4,200 ரொக்கம், மண் பானைகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.