உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஊதியூரில் முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஊதியூா் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image

காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 3:13 am IST

முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஊதியூா் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து காங்கயம் அருகே ஆறுதொழுவு, முதலிபாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள், காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட ஆறுதொழவு, முதலிபாளையம் கிராம பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு தனியாா் நிறுவனம் பரந்த புன்செய் விளைநிலப் பரப்பில் பொதுமக்களின் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையிலான, வணிகரீதியான முட்டைக் கோழிப் பண்ணையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். எனவே பொதுமக்கள் நலன் கருதி பண்ணை அமைப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

புகாா் மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் சட்டப்பேரவை அலுவலகத்தில் எம்எல்ஏ. என்.எஸ்.என்.நடராஜிடமும் மனு அளித்தனா்.