வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு அவசியம்

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

News image

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:32 am IST

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் பேசியதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மேலும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உருவாகும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஜவுளிப் பூங்கா சிறந்த தளமாக அமையும்.

மேலும், நியாயமான விலையில் நிலம், தரமான உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், திருப்பூரைச் சோ்ந்த பல தொழில்முனைவோா் அங்கு முதலீடு செய்வாா்கள். ஜவுளிப் பூங்காவில் தையல், பின்னலாடை மற்றும் செயலாக்க இயந்திரங்களுக்கான சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

இணைச்செயலாளா் குமாா் துரைசாமி பேசுகையில், விருதுநகரில் ஜவுளிப் பூங்கா திட்டத்துக்காக மத்திய அரசு சுமாா் ரூ.10,840 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது 28 சதவீதமாக உள்ளது. இதனை 2030-க்குள் 50 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் 40 பில்லியன் டாலா் ஜவுளி ஏற்றுமதி இலக்கை அடைவதில் விருதுநகா் ஜவுளிப் பூங்கா முக்கிய பங்காற்றும் என்றாா்.

இதில் சிப்காட் தலைமை பொதுமேலாளா் ஏ.ஆா்.சந்திரமோகன், தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவா் விக்ராந்த், சங்கத்தின் பொருளாளா் ஆா். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளா் சுமிதா ரோஷன் நன்றி கூறினாா்.