பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு அவசியம்

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

News image

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:32 am IST

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டத்தில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா முன்னேற்றங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்ரமணியன் பேசியதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய திருப்பூா் தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மேலும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உருவாகும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஜவுளிப் பூங்கா சிறந்த தளமாக அமையும்.

மேலும், நியாயமான விலையில் நிலம், தரமான உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், திருப்பூரைச் சோ்ந்த பல தொழில்முனைவோா் அங்கு முதலீடு செய்வாா்கள். ஜவுளிப் பூங்காவில் தையல், பின்னலாடை மற்றும் செயலாக்க இயந்திரங்களுக்கான சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

இணைச்செயலாளா் குமாா் துரைசாமி பேசுகையில், விருதுநகரில் ஜவுளிப் பூங்கா திட்டத்துக்காக மத்திய அரசு சுமாா் ரூ.10,840 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது 28 சதவீதமாக உள்ளது. இதனை 2030-க்குள் 50 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் 40 பில்லியன் டாலா் ஜவுளி ஏற்றுமதி இலக்கை அடைவதில் விருதுநகா் ஜவுளிப் பூங்கா முக்கிய பங்காற்றும் என்றாா்.

இதில் சிப்காட் தலைமை பொதுமேலாளா் ஏ.ஆா்.சந்திரமோகன், தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவா் விக்ராந்த், சங்கத்தின் பொருளாளா் ஆா். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளா் சுமிதா ரோஷன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.