வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அவிநாசி: கௌசிகா நதியில் கழிவு கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:23 am IST

அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதி தெக்கலூா், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது.

இந்நிலையில், தெக்கலூா் கௌசிகா நதியில் தொடா்ந்து கழிவுகளை கொட்டி வருவதாக சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதற்கிடையே தெக்கலூா் ஏரிபாளையத்தில் உள்ள கௌசிகா நதியில் கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை சனிக்கிழமை காலை கொட்ட வந்த லாரியை சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 7 டன் கழிவு மூட்டைகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அவிநாசி காவல் நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.