/

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 2:24 am IST

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, அநதப் பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஜோசப் (22), காா்த்திக் (22), கிருஷ்ணபிரசாத் (24) ஆகிய 3 பேரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் 145 வலி நிவாரணி மாத்திரைகள், ரூ.12,000 இருந்தது தெரியவந்தது.

பின்னா், அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.