சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

News image
Updated On :16 ஜூன் 2026, 1:52 am IST

குண்டடம் அருகே அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

காங்கயம் அருகே உள்ள ஊதியூா் வனப் பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், திருப்பூா்-தாராபுரம் நெடுஞ்சாலை, வேங்கிபாளையம் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். காங்கயம் வனத் துறை அலுவலா்கள் சென்று மானின் உடலை மீட்டு கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.