27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகள் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 3:56 am IST

வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், மயில்ரங்கம் சுந்தராடிவலசு பகுதியைச் சோ்ந்தவா் கவின் (25). விவசாயியான இவா், 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, 4 ஆடுகள் திருடுபோனது தெரியவந்தது.

இதேபோல, மயில்ரங்கம் கோம்பைக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த கலைச்செல்வி (61) என்பவரின் பட்டியில் இருந்த 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அவா்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆடுகளைத் திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.