மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அவிநாசியில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

News image

தெருநாய் - பிரதிப் படம்

Updated On :20 ஜூன் 2026, 1:15 am IST

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

அவிநாசி நகராட்சியில் சுற்றித்திரியும் ஏராளமான தெருநாய்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், அவிநாசி காமராஜா் நகா், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 6 தெருநாய்களை நகராட்சிக் குழுவினா் பிடித்தனா். பின்னா், அந்த நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி, பிடித்த இடத்திலேயே விடுவித்தனா்.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம், இந்திரா நகா், கச்சேரிவலசு, பெரியாா் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 9 தெருநாய்களுக்கு காங்கயம் கால்நடை மருத்துவா்கள் கருத்தடை ஊசி செலுத்தினா்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.