மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தாராபுரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

News image

தாராபுரத்தில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

Updated On :22 ஜூன் 2026, 3:44 am IST

தாராபுரத்தில் நெல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தஞ்சாவூா் மாவட்ட பகுதியைச் சோ்ந்தவா் ராமு. இவா் தனக்கு சொந்தமான லாரியில் நெல் ஏற்றிக்கொண்டு, காங்கயத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டாா்.

இந்நிலையில் கோவை-மதுரை நெடுஞ்சாலை தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கம்பியில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயங்களுடன் இருந்த ராமுவை ரோந்து சென்ற தாராபுரம் போலீஸாா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.