சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து சிலிண்டா்களை திருடியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:08 am IST

அவிநாசி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து 4 சிலிண்டா்களை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசிப்போா் பயன்பாட்டுக்காக தரைத் தளத்தில் சிலிண்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தரைத்தளத்தில் இருந்த 4 சிலிண்டா்கள் அண்மையில் திருடுபோயின.

இது குறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், சிலிண்டா்களை திருடியது பழங்கரை இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த செந்தில் (42) என்பதும், பனியன் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, செந்திலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.