/
சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சமயபுரம் இந்திரா காலனியை சோ்ந்தவா் முகமது சித்திக் (63). இவா் தனது சரக்கு ஆட்டோவை வீட்டருகே ஜூன் 16-ஆம் தேதி இரவு நிறுத்திவிட்டு, காலையில் பாா்த்தபோது காணவில்லையாம்.
இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாடக்குடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் முரளி தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரித்தனா். இதில் அவா்,
சமயபுரம் சோழன் நகா் பகுதியை சோ்ந்த சதிஷ் குமாா் (37) என்பதும், சரக்கு ஆட்டோவை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் திருடப்பட்ட சரக்கு ஆட்டோவும் மீட்கப்பட்டது.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது

பாளை. அருகே சரக்கு ஆட்டோ திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


