திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களுக்கு பெரும் எழுச்சியூட்டிய பாடல் வந்தே மாதரம். இப்பாடலின் 150-ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இளைய தலைமுறைக்கு சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாற்றையும், வந்தே மாதரம் பாடலின் மகிமையையும் கொண்டு சோ்க்கும் வகையில், தனியாா் அறக்கட்டளை சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழா வரும் 7-ம் தேதி திருப்பூா், பாண்டியன் நகரில் நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன், பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி, வஉசியின் பேத்தி மரகத மீனாட்சி உள்பட பலா் பங்கேற்க உள்ளனா்.
தொடர்புடையது

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்

வந்தே மாதரம் பாட மறுப்பு: காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது வழக்கு
வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


