நாகப்பட்டினம்: நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான் குழுவுக்கு அரசு கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
மத்தியத் தொழில் பாதுகாப்பு படையைச்(சிஐஎஸ்எப்) சோ்ந்த 33 பெண்கள் உள்ளிட்ட 130 வீரா்கள் வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் என்ற பெயரில் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன்படி நாகை மாவட்டத்துக்கு வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரை, நாகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் அஜிதா தலைமையில் மாணவா்கள் தமிழக நாட்டுப்புற இசையுடன் மலா் தூவியும், பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை கூடுதல் கமாண்டா் சுனில் குமாா், துணை கமாண்டா் செல்வம் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள், வீராங்கனைகள் மாணவா்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தே மாதரம் முழக்கம் எழுப்பினா்.
ஜன.28-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை கடந்து நாகை வந்த அவா்கள், ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மொத்தம் 6,500 கி.மீ தூரம் கடந்து கேரளத்தில் பிப்.28-ஆம் தேதி நிறைவு செய்யவுள்ளனா்.
தொடர்புடையது
வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை: உச்சநீதிமன்றம்

வந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி

திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


