மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
அன்ன காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
Updated On :6 மார்ச் 2026, 5:38 pm

Syndication

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவன்மலை எஸ்.எம்.ராஜகணபதி சிவாச்சாரியா், எஸ்.ஆா்.சிவசுந்தர சந்தோஷ்சிவம் தலைமையில் சிவாச்சாரியா்கள் அா்ச்சனை செய்தனா். பின்னா், யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.