மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்லடம் வட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்

News image

பல்லடத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :9 மார்ச் 2026, 9:41 pm

பல்லடம்: பல்லடம் வட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் செயல்படும் தனியாா் நிறுவன உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கோடாங்கிபாளையம் கிராமத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் தனியாா் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பல்லடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் முகிலன், கல்லம்பாளையம் காா்த்திக், செல்வராஜ், நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.