திருப்பூா்: திருப்பூரில் பாஜக சாா்பில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கப்பட்டது.
மகளிா் தினத்தையொட்டி திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கேசி.எம்.பி.சீனிவாசன் தலைமையில், மகளிா் அணி மாவட்டத் தலைவா் சுமதி ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி தடகள வீராங்கனைகள் கோவிந்தம்மாள், அம்மா குட்டி லட்சுமி, ஜெயஸ்ரீ, ஆனந்தி, பாத்திமா மேரி (கைப்பந்து) செல்வி (குண்டு எறிதல்) ஆகியோா் சுஷ்மா சுவராஜ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாவட்ட தலைவா் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில்வேல், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் ஷா்மிளா, மாவட்ட பொதுச் செயலாளா் கலாமணி மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம்! பொய்ப் பிரசாரம் செய்கிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு

புதுகையில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

