சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது

திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
- சித்திரிப்பு
Updated On :11 மார்ச் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் போலி ஆதாா் மூலம் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகர சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் அடிப்படையில் கோல்டன் நகா் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நபரை விசாரித்தனா். விசாரணையில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த கபிா் சிக்காா் (41) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

அதேபோல, எஸ்.வி.காலனி பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது சாகா் (35) என்பவரையும் போலீஸாா் பிடித்தனா். இவா் குமாா் நகா் 60 அடி ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா்கள் 2 பேரிடமும் இருந்த மேற்கு வங்க முகவரியிலான போலி ஆதாா் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், 2 பேரையும் வடக்கு போலீஸாா் கைது செய்து சேலத்தில் உள்ள வெளிநாட்டவா் மையத்துக்கு அனுப்பிவைத்தனா்.