தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 8:09 pm

வெள்ளக்கோவிலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் சனிக்கிழமை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வெள்ளக்கோவில்-மூலனூா் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், வெட்டுசாமிகோட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் (41) என்பவரைப் பிடித்தாா்.

கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.