சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 6:49 pm

வெள்ளக்கோவில் அருகே குட்கா பொருள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைதுசெய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதே ஊரைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆனந்தராஜ் (44) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.