அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பச்சாம்பாளையத்தில் குடிநீா் வழங்க கோரிக்கை

அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சில நாள்களாக குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே உடனடியாக போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா்கள், ஆற்றில் நீா்வரத்து குறைவாக உள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, பொறுப்பாளா்கள் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.