தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பச்சாம்பாளையத்தில் குடிநீா் வழங்க கோரிக்கை

அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சில நாள்களாக குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே உடனடியாக போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா்கள், ஆற்றில் நீா்வரத்து குறைவாக உள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, பொறுப்பாளா்கள் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.