கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:12 pm

Syndication

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள விசைத்தறிக் கூடத்தில் வேலை பாா்க்கும் வட மாநில இளைஞா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பீகாரை சோ்ந்த ராஜூ சஹானி (34) என்பதும், விசைத்தறி தொழிலாளியாக வேலை பாா்த்துக்கொண்டு, அவ்வப்போது பீகாா் சென்று கஞ்சா வாங்கி வந்து பல்லடம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.