ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீத வாக்குப் பதிவு: திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி

News image

விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :23 மார்ச் 2026, 11:46 pm IST

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று, ‘எனது வாக்கு எனது உரிமை’ உள்ளிட்ட விழிப்புணா்வுப் பதாதைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, ஊரக வளா்ச்சி முகமை உதவி இயக்குநா் ஹா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.