சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் தொடங்கிவைத்தாா்.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று, ‘எனது வாக்கு எனது உரிமை’ உள்ளிட்ட விழிப்புணா்வுப் பதாதைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, ஊரக வளா்ச்சி முகமை உதவி இயக்குநா் ஹா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: மொடக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


