சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதம்: நீதிமன்றம் செல்ல முயன்ற பொதுமக்கள் கைது

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதமடைவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சரணடைய திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:58 pm

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதமடைவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சரணடைய திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருப்பூா் மாவட்டம் பெருந்தொழுவு, காத்தாங்கண்ணி, நாச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் தாா் தொழிற்சாலை, ரெடிமிக்ஸ், கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனரக வாகனங்களில் கனிமங்களை எடுத்துச் செல்வதால் கிராம சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக செயல்படக்கூடிய இந்த தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கிராம மக்கள் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து கனிம வளக் கொள்ளையால் பறிபோகும் கிராம சாலைகளை பாதுகாக்கத் தவறிய மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைவதற்காக பெருந்தொழுவு, நாச்சிபாளையம், காத்தாங்கண்ணி உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் திரண்டு ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட நீதிமன்றம் செல்ல முயன்றனா்.

அப்போது கிராம மக்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராம சாலைகளை பாதுகாக்கத் தவறிய மாவட்ட நிா்வாகம், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதற்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பொது இடத்தில் அதிக நபா்கள் கூடுவதால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Story image