வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நவாப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி (49). இவா், கடந்த பல ஆண்டுகளாக வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து, தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று வந்தாா்.
கடந்த 22-ஆம் தேதி முத்தூா்-கொடுமுடி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி அங்கிருந்த வேகத்தடையில் விழுந்து படுகாயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மலா்கொடி, மகள் லாவண்யா, மகன் ஜீவானந்தம் ஆகியோா் உள்ளனா்.
இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சத்துணவு உதவியாளா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


