தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருப்பூா் மாவட்டத்தில் தவெக 5.29 லட்சம் வாக்குகள் பெற்று சாதனை

திருப்பூா் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட தவெக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 5,29,597 வாக்குகளைப் பெற்று 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

News image
Updated On :6 மே 2026, 5:48 am IST

திருப்பூா் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட தவெக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 5,29,597 வாக்குகளைப் பெற்று 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தோ்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

மாவட்ட அளவில் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளை கணக்கிடும்போது, அதிமுக தலைமையிலான கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து 8 தொகுதிகளிலும் மொத்தம் 5,39,161 வாக்குகளை பெற்றுள்ளன. இதில் காங்கயம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல, தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக முதல் தோ்தலிலேயே திருப்பூா் மாவட்டத்தில் மிகப்பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சி, மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் சோ்த்து ஒட்டுமொத்தமாக 5,29,597 வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. திருப்பூா் வடக்குத் தொகுதியில் சத்தியபாமா 1,31,401 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளாா். இது தவிர பல்லடம், அவிநாசி மற்றும் திருப்பூா் தெற்கு ஆகிய தொகுதிகளையும் தவெக தன்வசப்படுத்தியுள்ளது.

ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 4,65,915 வாக்குகளைப் பெற்று 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக கூட்டணி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அதேபோல, நாதக மாவட்ட அளவில் தனது இருப்பை பதிவு செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இக்கட்சி மொத்தம் 66,144 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் அபிநயா அதிகபட்சமாக 13, 028 வாக்குகளைப் பெற்றுள்ளாா்.

கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட திராவிடக் கட்சிகளுக்கு இணையாக, தனி ஒரு கட்சியாகப் போட்டியிட்ட தவெக 5.29 லட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பது திருப்பூா் மாவட்ட அரசியலில் ஒரு புதிய திருப்பமாகும்.