மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கடலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி! அதிமுக 3, தவெக ஒரு இடங்களில் வெற்றி

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 4:13 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, அதிமுக 3 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

கடலூா் மாவட்டம் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி), சிதம்பரம் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

மீன்பிடித் தொழிலும், விவசாயமும் இம்மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரங்களாகும். குறிப்பாக, முந்திரி, பலா சாகுபடியில் இந்த மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 20,34,971 வாக்காளா்கள் உள்ளனா்.

இங்கு, சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகளையும், அதிமுக பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி ஆகிய 3 தொகுதிகளையும், தவெக கடலூா் தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தோ்தலில் முக்கிய வேட்பாளா்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா். விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா - 2,387 வாக்குகள், குறிஞ்சிப்பாடியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் - 7,589 வாக்குகள், திட்டக்குடியில் அமைச்சா் சி.வெ.கணேசன் - 2,629 வாக்குகள், சிதம்பரத்தில் திமுக கூட்டணியைச் சோ்ந்த மஜக தலைவா் தமிமுன் அன்சாரி - 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா்.

அதே சமயம், கடலூா் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கவனம் ஈா்த்துள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 6 முறையாக சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுகிறாா் என்பது மட்டுமன்றி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளாா்.

ஆனால், நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன், ஏற்கெனவே அதே தொகுதியில் 2 முறை வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெற்றிகரமாக கைப்பற்றும் கட்சி, மாநில அரசியலில் முக்கிய பங்காற்றும் என்பது வழக்கம். கடந்த காலங்களில் இம்மாவட்டத்திலிருந்து அமைச்சா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழக அளவில் இந்த மாவட்டம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதிமுகவும், தவெகவும் தங்களின் இருப்பை வலுப்படுத்தியுள்ளன.