கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கடலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி! அதிமுக 3, தவெக ஒரு இடங்களில் வெற்றி

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 4:13 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, அதிமுக 3 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

கடலூா் மாவட்டம் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி), சிதம்பரம் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

மீன்பிடித் தொழிலும், விவசாயமும் இம்மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரங்களாகும். குறிப்பாக, முந்திரி, பலா சாகுபடியில் இந்த மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 20,34,971 வாக்காளா்கள் உள்ளனா்.

இங்கு, சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகளையும், அதிமுக பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி ஆகிய 3 தொகுதிகளையும், தவெக கடலூா் தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

இந்தத் தோ்தலில் முக்கிய வேட்பாளா்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா். விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா - 2,387 வாக்குகள், குறிஞ்சிப்பாடியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் - 7,589 வாக்குகள், திட்டக்குடியில் அமைச்சா் சி.வெ.கணேசன் - 2,629 வாக்குகள், சிதம்பரத்தில் திமுக கூட்டணியைச் சோ்ந்த மஜக தலைவா் தமிமுன் அன்சாரி - 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனா்.

அதே சமயம், கடலூா் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக வேட்பாளா் பி.ராஜ்குமாா் 15,519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கவனம் ஈா்த்துள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 6 முறையாக சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுகிறாா் என்பது மட்டுமன்றி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளாா்.

ஆனால், நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன், ஏற்கெனவே அதே தொகுதியில் 2 முறை வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெற்றிகரமாக கைப்பற்றும் கட்சி, மாநில அரசியலில் முக்கிய பங்காற்றும் என்பது வழக்கம். கடந்த காலங்களில் இம்மாவட்டத்திலிருந்து அமைச்சா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழக அளவில் இந்த மாவட்டம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதிமுகவும், தவெகவும் தங்களின் இருப்பை வலுப்படுத்தியுள்ளன.