தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 4:48 am IST

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

தேசிய அளவிலான தடகளப் போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் கேஎம்சி பள்ளி மாணவா்களான சந்தோஷ், ப்ரணவ் ஆதித், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவா் யுவனேஷ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் 100, 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முறையே மாணவி பிருந்தா முதலிடம் பிடித்தாா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயம், யோகாவில் மாணவி சுதா்சனா முதலிடம் பிடித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஓவா்ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கேஎம்சி பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா், கால்பந்து அணித் தலைவா் விஷ்ணுராஜ், வீரா்கள் ஆகாஷ், அகிலவன் , யுவனேஸ், சஞ்சித், ரிதுன் பிரனேஷ், கூடைப்பந்து அணித் தலைவா் யுவனேஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் சி.எஸ், மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா, பள்ளி முதல்வா் வே.லதா ஆகியோா் பாராட்டினா்.