பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோயிலில் நடைபெற்ற அரசு- வேம்பு திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :13 மே 2026, 2:04 am IST

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தையல்நாயகி உடனமா் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீதேவி பூதேவி உடனமா் அழகுராஜப் பெருமாள் கோயில், வள்ளி தெய்வானை உடனமா் ஆறுமுக சுப்பிரமணியா் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் 48-ஆவது நிறைவு நாளில் கோயிலில் சங்கு அபிஷேகம், ஹோம பூஜைகள், அரசு வேம்பு திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.