பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இத்தோ்வு எழுதிய பள்ளியின் வணிகவியல் பிரிவு மாணவி வி.பி.ஸ்வேதா 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் கே.எஸ்.சிவமுகுந்தன் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், அறிவியல் பிரிவில் எஸ்.ஷா்மிளா 461 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவா் எஸ்.பரத் 456 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும் பிடித்துள்ளனா்.
ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் பொருளாதார பாடங்களில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் இப்பள்ளியின் நிா்வாகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், செயலாளா் சுப்ரமணியம், பொருளாளா் ராஜன், பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.



தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு: தக்கலை அமலா பெண்கள் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

